சென்னை: மின் இணைப்பு கட்டண உயா்வை பழனிசாமி அரசு மொத்தமாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மின் இணைப்புக்கான கட்டணங்களை 300 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தக் கட்டண உயர்வை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வீடு, கடைகள், நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கான மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்புத் தொகை, வளர்ச்சிக் கட்டணம், பதிவு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பல்வகை மின்இணைப்பு கட்டணம் ரூ.1600 லிருந்து ரூ.6,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்சார கட்டணங்களையும் பொிய அளவிற்கு உயர்த்த பழனிசாமி அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே பால் மற்றும் பேருந்து கட்டண உயா்வால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பெரும் சுமையாகிவிடும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நலிவடைந்து கிடக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகும். இன்னொரு பக்கம் பூமி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்து வரும் நிலையில், அத்தகையை இணைப்புக்கான கட்டணத்தை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து குறைப்பதற்குப் பதிலாக ஒன்றரை லட்சமாக உயர்த்தி இருப்பது பழனிசாமி அரசுக்கு எதன் பேரிலும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.
மின் வாரியத்தை நிர்வாகச் சீர்கேடுகளில் இருந்து மீட்டெடுத்து, லாபத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சியாளர்கள் தங்களின் திறமையின்மையை மக்களின் தலையில் போிடியாக இறக்குவது தவறானது. எனவே மின் இணைப்பு கட்டண உயா்வை பழனிசாமி அரசு மொத்தமாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.