நம் முகம் பளிச்சென்று, எண்ணெய் வடியாது இருக்கவே நாம் விரும்புகிறோம். எண்ணெய் வடியும் முகம் கொண்டவர்கள் சோர்வாக காட்சி தருவதால் சங்கடமடைகிறார்கள். மேக் அப் செய்தாலும் பயனற்று போகிறது.
’சீபம்’ எனும் திரவம் சருமத்தில் சுரப்பதால் எண்ணெய் வடிவது போல் தோற்றமளிக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும், அதிகமாக சுரந்தால் முகத்தை மந்தமாக மாற்றிவிடும்.
உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதா என்பதை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். சருமத் துளைகள், முகத்தில் பிசுபிசுக்கும் தன்மை, ’பிளாக்ஹெட்’ எனப்படும் முகத்தில் தோன்றும் கரியநிற முற்கள், முகப்பருக்கள், முரடான சருமம் ஆகியவை உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதை குறிக்கலாம்.
சரிவிகித உணவு உட்கொள்வது அவசியமாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும். இப்பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.